அன்று பாவன நடந்த சோகம் .. இன்று ரேவதியா? ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை - நடிகை பாவனாவிற்கு அன்று நடந்து என்ன?

Ansgar R |  
Published : Aug 27, 2024, 07:50 PM ISTUpdated : Aug 27, 2024, 08:54 PM IST

Actress Bhavana Sexual abuse in Malayalam film industry : சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை பாவனா, ஓடும் காருக்குள் வைத்து பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக பெரும் சர்ச்சை வெடித்தது.

PREV
14
அன்று பாவன நடந்த சோகம் .. இன்று ரேவதியா? ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை - நடிகை பாவனாவிற்கு அன்று நடந்து என்ன?
Actor Siddique

இன்று கேரளா திரையுலகமே மாபெரும் அதிர்வலைகளில் சிக்கி உள்ளது என்றால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது எழும் பாலியல் புகார் காரணமாக, இன்று மலையாள நடிகர் சங்கத்தில் இருக்கும் 17 பேரும் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது (தலைவர் மோகன்லால் உள்பட). 235 பக்கங்கள் கொண்ட "ஹேமா கமிட்டியின்" அறிக்கை வெளியானதில் இருந்து பரபரப்பான பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

பிஜிலி ரமேஷ் உயிரை காவு வாங்கிய குடி; கடைசி வரை நிறைவேறாமல் போன அவர் ஆசை - கதறிய மனைவி!

24
Bhavana menon

நடிகை பாவனா, கடந்த 2002ம் ஆண்டில் தனது திரைப்படப் பயணத்தை இளம் வயதிலேயே தொடங்கிய ஒரு நடிகை. வெறும் 10 ஆண்டுகளில், மலையாளத் திரையுலகின் மிக முக்கியமான மற்றும் டாப் நடிகைகளில் ஒருவராக அவர் மாறினார். இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2017ல், அவரது வாழ்க்கை எதிர்பாராத ஒரு தடையை அவர் சந்திக்க நேரிட்டது.

34
Actress Bhavana menon

நடிகை பாவனா படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது, ​​ஒரு வாகனத்தில் வந்த கும்பலால் அவர் கடத்தப்பட்டு, காரின் உள்ளேயே அவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாவனா, ஐந்தாண்டுகள் சினிமா பக்கமே வராமல் இருந்தார். கடந்த 2022ம் ஆண்டு முதல் தான் அவர் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

44
Actor Dileep

அந்த சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஜூலை 2017ல் திலீப்பை கேரள காவல்துறை கைதும் செய்தது குறிப்பிடத்தக்கது. பிறகு திலீப் ஜாமீனில் வெளியே வந்தாலும், அந்த வழக்கு தொடர்ந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை, திலீப் மிரட்ட முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு அந்த வழக்கின் நிலை என்னவென்றே தெரியவில்லை.

க்யூட்.. கல்யாணத்துல எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. சிவகார்த்திகேயன் - ஆர்த்தியின் வெட்டிங் போட்டோஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories