தவறாக கேள்வி கேட்ட செய்தியாளர்... பதற்றமின்றி கூலாக பதிலளித்த ஐஸ்வர்யா ராய்

Published : Sep 06, 2022, 09:48 PM IST

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர் ஒருவர் தவறான கேள்வியை கேட்டுள்ளார்.

PREV
12
தவறாக கேள்வி கேட்ட செய்தியாளர்... பதற்றமின்றி கூலாக பதிலளித்த ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சீயான் விக்ரம், ரகுமான், பிரபு, நாசர், சரத்குமார் ஆகியோரும், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்வு என்பதால் இந்த விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... நடிகர் அஜித் பிஆர்ஓ-வின் உதவியாளரை அறைந்த பவுன்சர்கள்... பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு

22

நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் நந்தினி என்கிற பவர்புல்லான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அப்போது செய்தியாளர் ஒருவர் மணிரத்னத்துடன் இது உங்களுக்கு இரண்டாவது படம்... இதில் பணியாற்றியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்?. இதைக்கேட்டு ஷாக் ஆன ஐஸ்வர்யா ராய், என்னது இரண்டாவது படமா?, நான் அவருடைய நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். நீங்க குழப்பத்துல இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நல்லா போய் செக் பண்ணி பாருங்க.

என்னுடைய சினிமா கெரியர் ஆரம்பமானதே மணி சாரின் இருவர் படம் மூலம் தான். அதற்கு பின்னர் அவர் இயக்கிய குரு, இராவணன், இப்போ பொன்னியின் செல்வன்ல ஒர்க் பண்ணியிருக்கேன்” என தான் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த படங்களை பட்டியலிட்டார் ஐஸ்வர்யா ராய்.

இதையும் படியுங்கள்... ‘பொன்னியின் செல்வன்’ குந்தவையை போல்... பிங்க் நிற புடவையில் பேரழகியாக வந்த திரிஷா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

click me!

Recommended Stories