6-ஆம் வகுப்பு படிக்கும் போதே அந்த கிரிக்கெட் வீரரை காதலித்தேன்! ஐஸ்வர்யா லட்சுமி மனதை கொள்ளையடித்த வீரர் யார்?

First Published May 11, 2023, 8:14 PM IST

'பொன்னியின் செல்வன்' பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே, பிரபல கிரிக்கெட் வீரரை காதலித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஆகி வருகிறது.
 

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சாய் பல்லவி, அதிதி ஷங்கர் போலவே எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தற்போது திரையுலகில் இளம் நடிகைகளின் ஒருவராக உள்ளார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில்,  கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ஜகமே தந்திரம், புத்தம் புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், கட்டா குஸ்தி, போன்ற படங்களில் அடுத்தடுத்த நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

அஜித் இதுவரை எங்கெல்லாம் பைக் ரெய்டு செய்துள்ளார்? விலாவாரியாக மேப் போட்டு கட்டிய மேலாளர்!

இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்த கதாபாத்திரம் என்றால் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் தான். பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
 

இப்படத்தின் வெற்றி, இவரை அடுத்த லெவலுக்கும் கொண்டு சென்றுள்ளது என்றும் கூறலாம். அந்த வகையில் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா லட்சுமியை அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜித் இதுவரை எங்கெல்லாம் பைக் ரெய்டு செய்துள்ளார்? விலாவாரியாக மேப் போட்டு கட்டிய மேலாளர்!
 

இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி சிறுவயதில், அதாவது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே... பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்-யை  மனதளவில் காதலித்ததாகவும், ஆனால் அது ஒரு சிறு வயது கிரஷ் அவ்வளவு தான் என்று பேசியுள்ளார். மேலும் தற்போது கிரிக்கெட் பார்க்க நேரமில்லை என்பதையும் கூறியுள்ளார்.

அதே போல் தனக்கு பிடித்த நடிகர்கள் விஜய் மற்றும் அபிஷேக் பச்சன் என்றும், திரையுலகில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமையும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் வில்லி கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க இஷ்டம் இல்லை என்பது போல் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

6 வகுப்பிலேயே பிரபல கிரிக்கெட் வீரர் மீது காதலில் விழுந்த பொன்னியின் செல்வன் பூங்குழலி! அந்த அதிஷ்டசாலி யார் தெரியுமா?

click me!