முதலில் படத்தை பாருங்க.. அப்புறம் பேசுங்க! தி கேரளா ஸ்டோரி நடிகை அதா ஷர்மா ஓப்பன் டாக்

Published : May 16, 2023, 01:37 PM IST

'தி கேரளா ஸ்டோரி' தடை குறித்து நடிகை அதா ஷர்மா திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார்.

PREV
16
முதலில் படத்தை பாருங்க.. அப்புறம் பேசுங்க! தி கேரளா ஸ்டோரி நடிகை அதா ஷர்மா ஓப்பன் டாக்

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் சர்ச்சையில் சிக்கி, நாட்டின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில், சஇப்படத்தின் கதாநாயகியாக நடித்த நடிகை ஆதா ஷர்மா, கருத்து சுதந்திரம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

26

மே 8 அன்று, மேற்கு வங்க அரசு வகுப்புவாத வெறுப்பு மற்றும் வன்முறை தொடர்பான எந்த ஒரு சம்பவத்தையும் தடுக்க வேண்டும் என்று கூறி  ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை விதித்தது. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிடவிடாமல் தடுத்துள்ளது.

36

மேற்கு வங்க மாநிலத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கான காரணத்தைக் கேட்டு மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், படம் திரையிடப்படும் திரையரங்குகளில் பாதுகாப்பு அளிக்க எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க..புதிய வழித்தடத்தில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?

46

நடிகை ஆதா ஷர்மா இதுகுறித்து பேசுகையில், “கருத்து சுதந்திரத்தை கொண்டாட வேண்டும். திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். பின்னர் அவர்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்க அனைவருக்கும் விருப்பம் உள்ளது” என்று கூறினார். இப்படத்தில், கேரளாவில் இருந்து காணாமல் போன பாத்திமா பா என்ற மலையாளி இந்து நர்சிங் மாணவியின் பாத்திரத்தில் அதா நடித்துள்ளார்.

56

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். இது மனிதாபிமானம் மற்றும் பயங்கரவாதம். இது காதலில் ஏமாற்றப்படுவது பற்றியது. நீங்கள் ஏன் ஒருவரை கற்பழிக்கக்கூடாது என்பது பற்றி ஆகும். எனவே உலகில் எந்த இடத்திலிருந்தும் யாரும் இந்தப் படத்தை ஆதரிப்பது பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

66

பயங்கரவாதம் என்பது உலகளாவிய பிரச்சினை. எங்கள் படத்தில் பெற்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சான்றுகள் கூட இருப்பதால், படத்தைப் பார்த்து இவை நடக்கவில்லை என்று சொன்னவர்கள் இல்லை. எனவே பயங்கரவாதம் இல்லை என்று கூறுபவர்கள் எங்கள் படத்தைப் பார்க்கலாம். அவர்களின் மனதை மாற்றலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க..டெல்லி விரையும் டி.கே.சிவக்குமார்.. தலைமைக்கு தூதுவிட்ட சித்தராமையா - அடுத்த கர்நாடக முதல்வர் யார்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories