தொடர்ச்சியாக "லொள்ளு சபா" நாடகத்தில் நடித்து வந்த பாபுவிற்கு, கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான "யோகி" திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் பாபு, "யோகி" பாபு என்கின்ற நடிகனாக மாறினார். தொடர்ச்சியாக தமிழில் வெளியான பல திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக் தொடங்கியது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான "யாமிருக்க பயமேன்" திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு யோகி பாபுவிற்கான மௌசம் கூடியது. தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத காமெடியனாக மாறிய யோகி பாபுவிற்கு சைமா மற்றும் விகடன் போன்ற நிறுவனங்களும் விருதுகளை அழித்து பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வெகு சீக்கிரத்தில் யோகி பாபு உச்ச நடிகராக மாறினார். வருடத்திற்கு 15 முதல் 20 வரைபடங்களில் வரை இப்போது அவர் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.