மாஸ்டர் பிளானுடன் 'வாரிசு' ஆடியோ லாஞ்சுக்கு தயாராகும் தளபதி.! சைலண்டாக நடக்க போகிறதா எஸ்.ஏ.சியின் பஞ்சாயத்து?

First Published Nov 28, 2022, 4:52 PM IST

தளபதி விஜய் 'வாரிசு' படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், இதைத் தொடர்ந்து அவருடைய தந்தையும் பஞ்சாயத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
 

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்'  திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
 

இந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு தற்போது சென்னை செம்பரம்பாக்கம் அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரத்தியேக செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வரும் நிலையில், வாரிசு படப்பிடிப்பில் விலங்குகள் நல வாரியத்தின், உரிய அனுமதி இன்றி 5 யானைகளை வைத்து படப்பிடிப்பை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

நயன்தாராவின் கல்யாண சேலையை காப்பி அடித்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரேயா..! செம்ம ஹாட்போட்டோஸ்..!
 

இதையடுத்து, இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை விஜயின் ரசிகர்கள் சிலர் தாக்கியதாகவும், கடத்தி சென்றதாகவும் கூறப்பட்டது. பின்னர் போலீசார், செய்தியாளர்களை தாக்கிய 3 பேரை .கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
 

தற்போது இந்த பிரச்சனை குறித்து, வாரிசு பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் வாரிசு பட குழு இதற்க்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்கா விஜய்யின் ரசிகர்கள் 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகி வருகிறார்கள்.

மாஸ்டர் பிளானுடன் திடீர் என ஹைதராபாத் விசிட் அடித்த தனுஷ்..! ஏன் தெரியுமா? வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ..
 

ஏற்கனவே 'வாரிசு' படத்தில் இருந்து விஜய் பாடி வெளியான, ரஞ்சிதமே பாடல்... சில சர்ச்சைகளில் சிக்கினரும் செம்ம வைரலாக மாறியது. எனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அணைத்து பாடல்களையும் கேட்க ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள்.
 

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும், இதை அடுத்து விஜய் தன்னுடைய மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாருடன் கொண்டாட செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

18 வயசு பட்டாம்பூச்சி... ஹீரோயினாக முதல் பிறந்தநாள் - கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த அனிகா.. வைரலாகும் போட்டோஸ்
 

ஏற்கனவே விஜய்யின் தாயார் ஷோபா கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, விஜய்யின் மாமனார் முன்னிலையில்,  எஸ் கே சி மற்றும் விஜய்க்கு இடையே உள்ள பிரச்சனை குறித்து பஞ்சாயத்து நடைபெற உள்ளதாக கூறப்பட்டதால், இதற்கான பஞ்சாயத்துக்கு சைலண்டாக தயாராகி வருகிறாராம் எஸ்.ஏ.சி... ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

click me!