தோல்விக்கு பின்னும் தொடரும் லைகர் பட பஞ்சாயத்து... அமலாக்கத்துறை விசாரணைக்கு விஜய் தேவரகொண்டா ஆஜர்

First Published Nov 30, 2022, 2:31 PM IST

ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசான இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் தயாரித்து இருந்தார். பான் இந்தியா படமாக ரிலீசான இப்படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனையும் நடிக்க வைத்து இருந்தனர். இதுதவிர நடிகை ரம்யா கிருஷ்ணனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த லைகர் திரைப்படம், அதன் பட்ஜெட்டில் 30 சதவீதத்தை கூட வசூலிக்கவில்லை. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்த இப்படத்தால் நடிகர் விஜய் தேவரகொண்டா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இது ஒருபுறம் இருக்க இப்படத்தில் வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதையும் படியுங்கள்... சந்திரமுகி 2-வில் ஜோதிகாவுக்கு பதில் இவரா..? சர்ச்சைக்குரிய நடிகையை சந்திரமுகியாக்கும் பி.வாசு!

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர்களான பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து லைகர் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் விசாரணைக்கு ஆஜராகுமாரு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். லைகர் படம் படுதோல்வி அடைந்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்திற்காக ஹவாலா பணத்தை முதலீடு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...  என்ன செஞ்சாலும் வேலைக்கு ஆகவில்லை... ரசிகர்களின் மூன்று ஃபேவரட் சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.!

click me!