இந்நிலையில், நேற்று சிவராத்திரி பூஜையின் போது டிரம்ஸ் சிவமணி அருகே அமர்ந்திருந்த மயில்சாமி, அப்போது அவரிடம் தனது நீண்ட நாள் ஆசை என்ன என்பதை சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால், இந்த மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு விவேக்கை கூட்டிட்டு வந்திருக்கேன். இப்போ உங்களையும் கூட்டிட்டு வந்துட்டேன். எப்படியாவது ரஜினிகாந்தையும் அழைத்து வந்து, அவர் கையால் அங்குள்ள சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வைக்கணும்னு மயில்சாமி சொன்னாராம்.