நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்தது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார் விக்ரம். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப வீரம் நிறைந்த ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விக்ரம். அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் விக்ரம் கமிட் ஆன திரைப்படம் தங்கலான்.