பாபி சிம்ஹாவின் அறிமுகம்:
தமிழ் சினிமாவில் கடந்த 2007-ஆம் ஆண்டு 'மாய கண்ணாடி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இதை தொடர்ந்து 'காதலில் சொதப்புவது எப்படி', 'பீட்சா', 'நான் ராஜாவாக போகிறேன்', 'சூது கவ்வும்' போன்ற பல படங்களில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது, 2014-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா ' திரைப்படம் தான். இந்த படத்தில் அசால்ட் சேதுவாக நடித்து, அலப்பறை செய்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்புக்காக சிறந்த குணசித்ர நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.