இதையடுத்து அவர் இயக்கிய அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டு முழு நேர நடிகராக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. அதன்படி கல்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்த போது தான் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.