தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாலா. முன்னணி நடிகர்களுக்கு எப்படி தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ... அதே போல் சில இயக்குனர் படங்களுக்கு மட்டுமே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் தனித்துவமான கதைக்களத்துடன் நேர்த்தியான நடிப்பை நடிகர்களிடம் இருந்து வாங்கி, படமாக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் பாலா.
அதேபோல் இவர் இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, என ஒவ்வொரு படமும் வெவ்வேறான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டவை. படத்தில் கதை மட்டும் இன்றி அதில் இருக்கும் நடிகர்களும் அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள் என்று கூறினால் அது மிகையல்ல.
இந்த படத்தின் சர்ச்சைக்கு பின்னர், நடிகர் சூர்யாவை வைத்து, வணங்கான் படத்தை இயக்கினார். ஆனால் திடீர் என , இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த படத்தை பாதியிலேயே நிறுத்தும் வரை சென்றுவிட்டது. எனவே வேறு ஒரு நடிகரை வரித்து இயக்குனர் பாலா 'வணங்கான்' படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை 'வணங்கான்' படத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து எவ்வித தகவல் வெளியாகாத நிலையில், பிரபல நடிகரும், இயக்குனருமான ஜி எம் குமார் இயக்குனர் பாலா குறித்து கூறியுள்ள தகவல்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த காட்சி குறித்து தற்போது பேசியுள்ள ஜி எம் குமார் மொத்தம் 14 நாட்கள் நிர்வாணமா, இந்த காட்சியில் நடித்ததாகவும் அதில் 7 நாட்கள் உண்மையிலேயே இயக்குனர் பாலா தன்னை நிர்வாணமாக 80 அடி மரத்தில் தொங்க விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.