Published : Dec 16, 2022, 06:00 PM ISTUpdated : Dec 20, 2022, 03:22 PM IST
தமிழ் திரையுலகில் பிரபலமான 5 நட்சத்திரங்கள் இந்த வருடம், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர். அவர்கள் யார்... யார்... என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்ட 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்ற இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் இவர் நடித்த 'யசோதா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் தனக்கு மயோசிட்டிஸ் பிரச்சனை உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். அரியவகை தசை அழிற்சி நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் சமந்தா, வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. எழுந்து கூட நிற் கமுடியாத நிலையில் இருக்கும் அவர் விரைவில் உடல்நலம் தேறி நடிக்க வரவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
25
பூனம் கவுர்:
தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை பூனம் கவுர், தமிழில் நெச்சிருக்கும் வரை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து, உன்னைப்போல் ஒருவன், பயணம், 6 மெழுகுவத்திகள், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஃபைப்ரோமயால்ஜியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உடல் வலியாலும், சோர்வாலும் அவதிப்பட்டு வந்ததை கடந்த மாதம் தான் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழ் சினிமாவில், 'பொய் சொல்ல போறோம்' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். இதை தொடர்ந்து ஏகன், பலே பாண்டியா, கோ, போன்ற பல படங்களில் நடித்துள்ள இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் உள்ளார். இந்நிலையில் சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டதை கூறிய பின்னர், தானும் இதே பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலில் காலில் வீக்கம் ஏற்பட்டதை சாதாரணமாக விட்டுவிட்டேன். அதன் மறுநாளில் இருந்து வீக்கம் அதிகமாகி வலி ஏற்பட்டது. பின் தசை அலர்ஜி நோய் இருப்பது கண்டிபிடித்து சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். சமந்தாவின் நிலையில் நானும் உள்ளதால் அவருடைய வலி வேதனைகள் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என உருக்கமாக கூறி இருந்தார்.
நடிகையும் தொகுப்பாளியுமான திவ்யா தர்ஷினி... சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு கூட வீல் சேரில் வந்திருந்தார். மேலும் சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனை குறித்து தெரிவித்த போது, தனக்கும் ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாகவும், ஆனால் தற்போது மற்ற சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வருவதால், இன்னும் மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுக்க வில்லை என தெரிவித்திருந்தார்.
55
இயக்குனர் அனுதீப்:
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, பிரின்ஸ் படத்தை இயக்கியவர் அனுதீப். காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானபோதிலும் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தனக்கு "Highly Sensitive Person" என்கிற அரியவகை நோய் இருப்பதாக தெரிவித்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் ஜூஸ் குடித்தால் கூட, மூளை 24 மணிநேரத்திற்கு செயல்படாமல் போய் விடுமாம். அதே போல் அதிக ஒளி, நெடி போன்றவை இவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் என கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.