பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரை அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். பைரப்பா - ருத்ரம்மா தம்பதியின் மகளான நடிகை சரோஜா தேவி, கடந்த 1938-ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தார். இவருடைய தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
நடிகை சரோஜா தேவி, தனது 13 வயதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடியபோது, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இவருக்கு பட வாய்ப்பு கொடுத்துள்ளார். கன்னடத்தில் வெளிவந்த மகாகவி காளிதாஸா என்கிற படம் தான், நடிகை சரோஜா தேவியின் முதல் படமாகும். இப்படம் 1955-ல் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் துணை நடிகையாக தான் நடித்திருந்தார் சரோஜா தேவி.