ரேனிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா-2,நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன். ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தாலும், கொரோனாவாலும் அவரது வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வாழ்ந்து வந்த இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.