இதனிடையே இந்த படத்தின் சூட்டிங் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் விசாரித்தபோது, உரிய அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், 'கேப்டன் மில்லர்' படத்தை நிறுத்த கோரி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். எனவே 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் உரிய அனுமதியோடு இன்று படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.