விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. புதிய கடன் வரம்பு.. மத்திய அரசின் புதிய பிளான்

Published : Mar 24, 2026, 12:03 PM IST

விவசாயக் கடன் தள்ளுபடிக்கு பதிலாக, விவசாயிகளின் வருமானத்தை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடமானம் இல்லாத கடன் வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது போன்ற நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

PREV
15
விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்பு

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் குறித்து மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். கடன் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, விவசாயிகளின் வருமானத்தையும் பொருளாதார நிலையையும் வலுப்படுத்துவதே மத்திய அரசின் முதன்மை நோக்கமாக இருப்பதாக அவர் கூறினார். தற்போதைக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

25
கிசான் கிரெடிட் கார்டு

விவசாயிகளுக்கு எளிதான மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் வரை பயிர் கடன்கள் சலுகை வட்டியில் வழங்கப்படுகின்றன. மேலும், கடனை நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதல் வட்டி சலுகையும் வழங்கப்படுகிறது. இது “மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியம் திட்டம்” கீழ் நடைமுறையில் உள்ளது.

35
வேளாண் கடன் வரம்பு உயர்வு

அதே நேரத்தில், விவசாயிகளுக்கு நிவாரணமாக அடமானம் இல்லாத வேளாண் கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.1.60 லட்சமாக இருந்த இந்த வரம்பு தற்போது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வங்கிகள் வேளாண் துறைக்கு போதுமான அளவு கடன் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

45
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி வழங்கப்படுகிறது. இதனுடன், பயிர் காப்பீட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, விவசாயிகளின் வருமானத்தை நிலைநிறுத்தவும், அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன. இதனால் கடனில் அதிகமாக சார்ந்திருக்கும் நிலையும் குறைகிறது.

55
விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு

மொத்தத்தில், விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு, குறைந்த வட்டி கடன், மற்றும் நிதி பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதே அரசின் நோக்கமாக உள்ளது. மேலும், ராணுவத்தினருக்கான ஊனமுற்ற ஓய்வூதிய வரிவிலக்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வரி சட்டம் பழைய சலுகைகளை நீக்காமல் தெளிவுபடுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories