பெட்ரோல் போடுவதற்கு முன் மீட்டரில் "0.00" என்று இருப்பதை உறுதி செய்யுங்கள். எரிபொருள் நிரப்பப்படும்போது, டிஸ்ப்ளேவை தொடர்ந்து கவனியுங்கள். சந்தேகம் ஏற்பட்டால், பெட்ரோல் பங்க்கில் உள்ள 5 லிட்டர் அளவு சோதனையை (5 litre measure test) செய்து காட்டும்படி கேட்கலாம்.
எப்போதும் ரசீது வாங்குங்கள். இது பணம் செலுத்தியதற்கான ஆதாரம். அவசரத்தில் மொபைல் பார்ப்பது அல்லது வேறு பக்கம் கவனத்தைச் சிதறவிடுவதைத் தவிர்க்கவும்.
மீட்டர் மீது கண் வையுங்கள்
சுருக்கமாகச் சொன்னால், ரவுண்ட் ஃபிகரில் பெட்ரோல் போடுவதால் எந்த நஷ்டமும் ஏற்படாது. 100, 200 அல்லது 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவது முற்றிலும் பாதுகாப்பானதுதான். ஆனால், பெட்ரோல் பங்க் இயந்திரங்கள் சரியாக இருக்க வேண்டும், வாடிக்கையாளர்களாகிய நாமும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, அடுத்த முறை பெட்ரோல் பங்க் செல்லும்போது வதந்திகளை நம்பாமல், உண்மைகளை நம்பி மீட்டர் மீது ஒரு கண் வையுங்கள். இதுதான் உங்கள் பணத்தையும் நம்பிக்கையையும் பாதுகாக்க எளிய வழி ஆகும்.