Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?

Published : Jun 13, 2026, 07:02 AM IST

Tamil Nadu Government: பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு அசத்தலான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி தேவையான கடனு உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

PREV
15
பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள்

பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு அசத்தலான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற வேண்டும் ஒருவரை நம்பி இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் திட்டமானது வகுக்கப்படுகிறது. அதன் படி மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை, திருமண உதவித்திட்டம், கர்ப்பிணி பெண்கள் உதவி திட்டம், கணவனை இழந்த மற்றும் கைம்பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவி திட்டம் போன்ற பல்வேறு சூப்பரான திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.

25
தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்

மேலும் சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி தேவையான கடனு உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறது.

School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

35
என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

இத்திட்டம் சுயவேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற மூன்று மாதம் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தையல் தெரிந்தவராக இருக்க வேண்டும். இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72,000 மேல் இருக்கக்கூடாது. குறிப்பாக அவர்களுக்கு 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவரகாவும் இருக்க வேண்டும்.

45
ஆவணங்கள்

மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள். 75% மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மாராக இருத்தல் வேண்டும். தையல் பயிற்சி பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

55
விண்ணப்பிப்பது எப்படி.?

இந்த திட்டத்திற்கு இ சேவை மையம் மூலமாகவும், https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை சரிபார்த்து, அதிகாரிகள் அவற்றை பரிசீலித்த பிறகு தகுதியானவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories