ஈரோடு, கோவை, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது உண்மையில் ஒரு “டபுள் ஜாக்பாட்” எனலாம். ஏனெனில், இதன் மூலம் பெங்களூரு, சேலம், கோவை, கொச்சி போன்ற நகரங்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்ல முடியும். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வணிகத்துறையினருக்கு இது பெரும் உதவியாக இருக்கும். மேலும், இந்த ரயில் Wi-Fi, சாய்வு இருக்கைகள், பயோ- கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.