APY Scheme: ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க, மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இதன் மூலம் மாதாமாதம் பென்ஷன் மற்றும் ரூ.8.5 லட்சம் வரை நிதிப் பலனைப் பெறலாம்.
இந்தியாவில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள், குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா (APY) என்ற அருமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் சந்தாதாரர்கள் மாதம் ரூ.210 மட்டும் செலுத்தினால் போதும், 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம். அதுமட்டுமல்லாமல், ரூ.8.5 லட்சம் வரை கார்பஸ் நிதியும் கிடைக்கும். இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) நிர்வகிக்கிறது. 2015 பட்ஜெட்டில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்தது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
26
அடல் பென்ஷன் யோஜனா: யாருக்காக, என்ன பயன்?
அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது அனைத்து இந்திய குடிமக்களுக்குமான ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட அமைப்புசாரா தொழிலாளர்களை இது இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேருபவர்கள், 60 வயதை கடந்த பிறகு, மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஒரு குறிப்பிட்ட தொகையை பென்ஷனாகப் பெறுவார்கள். இந்த பென்ஷன் தொகை, அவர்கள் செலுத்தும் மாதாந்திர சந்தாவைப் பொறுத்து மாறும்.
36
தகுதிகள், பிரீமியம் விவரங்கள் என்ன?
18 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் அடல் பென்ஷன் யோஜனாவில் சேரத் தகுதியானவர்கள். தபால் நிலையம் அல்லது ஏதாவது ஒரு பொதுத்துறை வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது கட்டாயம். ஆனால், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தில் சேர முடியாது. பிரீமியம் தொகை, சந்தாதாரரின் வயது மற்றும் அவர் விரும்பும் பென்ஷன் தொகையைப் பொறுத்து மாறும். உதாரணமாக, 18 வயதில் சேர்ந்து மாதம் ரூ.5,000 பென்ஷன் பெற விரும்பினால், 42 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.210 செலுத்த வேண்டும். அதே 40 வயதில் சேருபவர், 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1454 செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் 60 வயதுக்குப் பிறகு, அவர்கள் செலுத்திய சந்தாவுக்கு ஏற்ப மாதம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 அல்லது ரூ.5,000 பென்ஷன் பெறுவார்கள். APY மூலம் மூன்று விதமான பலன்கள் கிடைக்கும். சந்தாதாரர் இறந்தால், அவரது வாழ்க்கைத்துணைக்கு அதே பென்ஷன் வழங்கப்படும். சந்தாதாரர் மற்றும் வாழ்க்கைத்துணை இருவரும் இறந்தால், நாமினிக்கு கார்பஸ் நிதி வழங்கப்படும். ரூ.1,000 பென்ஷனுக்கு ரூ.1.70 லட்சம், ரூ.2,000 பென்ஷனுக்கு ரூ.3.40 லட்சம், ரூ.5,000 பென்ஷனுக்கு ரூ.8.50 லட்சம் என கார்பஸ் நிதி கிடைக்கும்.
56
அடல் பென்ஷன் யோஜனா ஆவணங்கள்
அடல் பென்ஷன் யோஜனாவில் சேருவது ரொம்ப சுலபம். தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, வங்கிக்குச் சென்று பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க, வங்கியின் மொபைல் ஆப் அல்லது eNPS போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, சேமிப்புக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண் மற்றும் வயதுச் சான்றிதழுடன் KYC ஆவணங்கள் தேவைப்படும்.
66
மரணத்திற்குப் பின் கிடைக்கும் பலன்கள்
சந்தாதாரர்கள் ஆட்டோ டெபிட் வசதியைத் தேர்வு செய்யலாம். ஆனால், வங்கிக் கணக்கில் சரியான பேலன்ஸ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். ரூ.100 வரை சந்தாவுக்கு ரூ.1, ரூ.101 முதல் ரூ.500 வரை ரூ.2, ரூ.1,000 வரை ரூ.5, ரூ.1,000க்கு மேல் ரூ.10 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து 6 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், கணக்கு முடக்கப்படும். 24 மாதங்கள் கட்டவில்லை என்றால், கணக்கு மூடப்பட்டு, அதுவரை செலுத்திய பணம் திருப்பித் தரப்படும். சந்தாதாரர் 60 வயதுக்கு முன் இறந்தால், அவரது வாழ்க்கைத்துணை கணக்கைத் தொடரலாம் அல்லது கணக்கை மூடிவிட்டு வட்டியுடன் பணத்தைப் பெறலாம். திருமணமாகாதவர் இறந்தால், நாமினிக்கு அந்தப் பணம் கிடைக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.