பிக்பாஸ் 6-ல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சம்பவம் நடக்கப்போகுது... இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா?

Published : Oct 29, 2022, 11:26 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைவான அளவிலான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.

PREV
14
பிக்பாஸ் 6-ல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சம்பவம் நடக்கப்போகுது... இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 20 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், தற்போது 19 போட்டியாளர்களே உள்ளனர். கடந்த வாரம் ஜிபி முத்து பாதியிலேயே வெளியேறினார். அதேபோல் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக எலிமினேட் செய்யப்பட்டார்.

24

ஜிபி முத்து இருந்த வரை கலகலப்பாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் பின் களேபரம் ஆகிவிட்டது. இதற்கு காரணம் அசீம் தான். கடந்த வாரமே ஆயிஷா உடன் சண்டை போட்டதன் காரணமாக அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டபோதும் இந்த வாரமும் அதே தவறை செய்துள்ளார். இதனால் இந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இதையும் படியுங்கள்... ரிலீசாகி ஒரு வாரம் தான் ஆகுது... அதற்குள் இப்படியா..! பரிதாப நிலையில் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’

34

ஆனால் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் அசல் கோளார் தான் வெளியேறுவார் போல தெரிகிறது. அவர் தொடர்ந்து பெண்களிடம் செய்துவரும் சில்மிஷ வேலைகள் பிடிக்காததன் காரணமாக அவர் மீது வெறுப்புடனே இருந்த ரசிகர்கள், அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று கூறி வந்தனர்.

44

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தருணம் இன்று நடக்கப்போகிறது. அதன்படி இன்று அசல் கோளார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் அசீமுக்கும் இந்த முறை கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்காக.. டுவிட்டரில் சைலண்டாக விஜய் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

Read more Photos on
click me!

Recommended Stories