பட்டா மாறுதலுக்கு வந்த திருமணமான பெண்ணை மிரட்டி மகாபலிபுரத்தில் ரூம் போட்டு பலாத்காரம் செய்த விஏஓ..!

Published : Jun 28, 2022, 01:41 PM IST
பட்டா மாறுதலுக்கு வந்த திருமணமான பெண்ணை மிரட்டி மகாபலிபுரத்தில் ரூம் போட்டு பலாத்காரம் செய்த விஏஓ..!

சுருக்கம்

கடலூர் மாவட்டம் சேடப்பாளையத்தில் இளையராஜா என்பவர் விஏஓவாக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய அலுவலகத்திற்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு சென்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுடைய செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்டனர். 

கடலூரில் பட்டா மாறுதலுக்காக வந்த திருமணமான இளம் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் சேடப்பாளையத்தில் இளையராஜா என்பவர் விஏஓவாக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய அலுவலகத்திற்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு சென்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுடைய செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், அந்த பெண்ணை அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் தொல்லை.. குழந்தையையின் கையை உடைத்த காமெறி பிடித்த தாய்.!

இதையும் படிங்க;- கிரிக்கெட் மட்டையால் மண்டையை பொளந்து கொலை.. தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்

இந்நிலையில், அந்த படத்தை காட்டி பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு செய்து மிரட்டி வந்துள்ளார். இதனையடுத்து, வேறு வழியில்லாமல் அந்த விஏஓவின் மிரட்டலுக்கு அந்த பெண் பணிந்தார். பின்னர், வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளையராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, கணவரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். 

இதையும் படிங்க;- கல்லூரி மாணவியுடன் நிர்வாண வீடியோ கால்.. ஆபாச சைகைகள்.. கல்லூரி சேர்மன் பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்.!

இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் மனைவியுடன் சென்று கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் உறுதியாகும் பட்சத்தில் விஏஓ எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!