ஃபுல் மப்பில் வந்து நைட்டில ஓயாத டார்ச்சர்.. வலி தாங்க முடியாததால் கணவரின் தலையில் அம்மிக்கல்லைப்போட்ட மனைவி

By vinoth kumarFirst Published Jun 28, 2022, 10:49 AM IST
Highlights

கடந்த சில மாதங்களாக கிருஷ்ணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால், குடும்ப செலவுக்கு பணம் தராமல் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல குடிபோதையில் வீடு திரும்பிய கிருஷ்ணன், வாய்க்கு ருசியாக உணவு சமைக்கவில்லையா எனக் கேட்டு மனைவி விஜயலட்சுமியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தினமும் குடிபோதையில் வந்து மனைவியை சரமாரியாக தாக்கிய கணவரின் தலையில் அம்மிக்கல்லை  கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, தும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவரது மனைவி விஜயலட்சுமி (27). இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரு தனியார் செங்கல் சூளையில் 12 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே கெடார் கிராமம். இத்தம்பதியின் 2 மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- உல்லாசத்துக்காக.. ஒரு வாலிபர் 4 பெண்கள் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா? வலி தாங்க முடியாமல் கதறல்..!

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கிருஷ்ணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால், குடும்ப செலவுக்கு பணம் தராமல் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல குடிபோதையில் வீடு திரும்பிய கிருஷ்ணன், வாய்க்கு ருசியாக உணவு சமைக்கவில்லையா எனக் கேட்டு மனைவி விஜயலட்சுமியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாய்த்தகராறு முற்றியதில் மனைவியை கிருஷ்ணன் சரமாரி தாக்கிவிட்டு, போதையில் மட்டையாகி அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.

இதையும் படிங்க;-  ஒரே நேரத்தில் 3 பேரை போட்டுதள்ள பக்கா ஸ்கெட்ச்.. 7 பேரை துப்பாக்கி முனையில் அலேக்கா தூக்கிய சென்னை போலீஸ்.!

இதையும் படிங்க;-  மீனவப்பெண் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்.. வெறி தீராததால் அந்த இடத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.!

இதில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி, தனது கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளார். இதில், தலை நசுங்கி அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவி விஜயலட்சுமியை கைது செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.

click me!