காருக்குள் பெண்ணை கட்டிவைத்து இயற்கைக்கு முரணான உடலுறவு.. திரண்ட கிராம மக்கள்.. தப்பித்த கொடூரன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2021, 5:16 PM IST
Highlights

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த ஆய்வகத்தில் அவர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அந்த ஆய்வகத்தில் பணிபுரியும்  ஒரு இளைஞன் ஆய்வகத்தில் அந்த பெண் ஆடைகளை மாற்றும்போது அந்தை பெண்ணை நிர்வாணமாக வீடியோக்களை பதிவு செய்துள்ளார். 

தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் லேப் டெக்னீசியனை ஆபாசமாக வீடியோ எடுத்து பின்னர் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றர். அந்தப் பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க எத்தனையோ சட்ட திட்டங்களை அரசும் காவல் துறையில் கொண்டு வந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் ஹரியானா மாநிலம் குர்கிராமின் உள்ள சோனிபட் சார்ந்த 26 வயது பெண் ஒரு தனியார் ஆய்வகத்தில் லேப் டெக்னீசியன் ஆக வேலை செய்து வருகிறார். 

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த ஆய்வகத்தில் அவர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அந்த ஆய்வகத்தில் பணிபுரியும்  ஒரு இளைஞன் ஆய்வகத்தில் அந்த பெண் ஆடைகளை மாற்றும்போது அந்தை பெண்ணை நிர்வாணமாக வீடியோக்களை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த  வீடியோக்களை  காட்டி அந்த பெண்ணை தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு மிரட்டி வந்தார். அதற்கு பயந்து அந்த பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து அந்த இளைஞர் அந்த பெண்ணுடன் பல முறை ஊடலுறவு அனுபவித்து வந்துள்ளார். அதில் எதிர்பாராத விதமாக அந்தப் பெண் கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், உடனே கர்ப்பத்தை கலைக்குமாறு அறிவுரை கூறியதுடன், அப்படி செய்யாவிட்டால் அந்த பெண்ணின் குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அந்தப் பெண்ணை வஜிராபாத் கிராமத்திற்கு பேசவேண்டும் என வரவழைத்த அந்த இளைஞர், அந்தப் பெண்ண நண்பர்களின் உதவியுடன் காரில் கடத்தினார். பின்னர் அந்த பெண்ணின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கார் பாட்ஷா பூர் நோக்கி விரைந்தது அப்போது காரில் வைத்து அந்தப் பெண்ணுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டார். அப்போது கார் கண்ணாடிகள் திறந்து இருந்ததால் அந்தப் பெண்  அலறல் சத்தத்தைக் கேட்டு பொதுமக்கள் காரை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அந்த பெண்ணை பல இடங்களில் கத்தியால் கீறினான். ஒருவழியாக அந்த பெண்ணை பத்திரமாக மீட்ட பொதுமக்கள், மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த இளைசனை வலைவீசி தேடி வருகின்றனர். 

 

click me!