பெற்ற தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அந்த 12 வயது சிறுமி. அந்த சிறுமிக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக் கேட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு இந்த தகவலை மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வந்த மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தந்தை, என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். தந்தையின் நண்பரான கண்ணனும் பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்வேன் என்று தந்தை மிரட்டி பல்வேறு முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தன்னிடம் கண்ணன் நெருக்கமாக இருந்ததை அரிசி கடை உரிமையாளர் முகமது ரபிக் பார்த்து விட்டார்.
அவரும் என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..பாஜகவுக்கு தாவும் எடப்பாடி அணி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல் பின்னணி.! பற்ற வைத்த ஓபிஎஸ் டீம் !!
இதையும் படிங்க..கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !