மனைவியை பிரிந்து தனிமையில் இருந்த தந்தை.. பெற்ற மகளையே கர்ப்பமாக்கி அட்டூழியம்.. ஆண் குழந்தை பிறந்தது.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2022, 6:16 PM IST
Highlights

13 வயது மகளை தந்தை கர்ப்பமாக்கிய நிலையில் அந்தப் பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் போலீசாரால் அக்கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.

13 வயது மகளை தந்தை கர்ப்பமாக்கிய நிலையில் அந்தப் பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் போலீசாரால் அக்கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆறு வயது குழந்தை முதல் 60 வயது கிழவி வரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் அவலம் அரங்கேறி வருகிறது. இது போன்ற குற்றங்களை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை,

காதலிப்பது போல நடித்து கர்ப்பமாக்கி ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். இது ஒருபுறம் எனில் மறுபுறம் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பரவலாக அதிகரித்துள்ளது. சில நேரங்களில் உறவினர்களே சிறுமிகளை வன்புணர்வு செய்யும் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் தந்தையைப் பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கி குழந்தை பிறக்க காரணமாக இருந்துள்ள கொடூரம் ஒன்று நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  உன் லவ் உண்மைனா.. இதை நீ செய்யணும்.. மாணவிக்கு காதலன் வைத்த கொடூரமான டெஸ்ட்..!

முழு விவரம் பின்வருமாறு:-  வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45)  இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு கணவர் சங்கரின் கொடுமை தாங்க முடியாமல் மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். அதனையடுத்து மகன் மகளுடன் சங்கர் வசித்து வந்தார். இல்லைதான் அவரது மகளுக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது, அதனையடுத்து, அந்த பெண் அடுக்கம்பாறையில் உள்ள  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது, திருமணமே ஆகாத, வெறும் 13 வயதே ஆன சிறுமிக்கு குழந்தை பிறப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் வேலூர் சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்  மருத்துவமனைக்கு வந்தனர், நடந்தவை குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கர்ப்பத்திற்கு தன் தந்தையே காரணம் என்று அந்தசிறுமி கூறினார். அதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

இதையும் படியுங்கள்: "அண்ணா என்ன விட்ருங்க; கெஞ்சிக் கதறியும் விடாமல் பெண்ணை வீடு புகுந்து தூக்கிச் சென்ற 15 பேர; பகீர் வீடியோ.!

மனைவி பிரிந்து சென்று, தனிமையில் இருந்த தந்தை மகளை தவறாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர், இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை சங்கரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையால் கற்பழிக்கப்பட்ட 13 வயது மகள் குழந்தை பெற்றெடுத்துள்ளார் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!