நாக்கு கூசும் அளவிற்கு ஆபாசம்.. கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..வசமாக சிக்கிய பேராசிரியர்

By vinoth kumarFirst Published Dec 19, 2021, 9:32 AM IST
Highlights

சென்னை வேளச்சேரி அருகே ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. இங்கு. தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த ஆபிரகாம் அலெக்ஸ் (48), இங்கு பேராசிரியராக பணியாற்றி வந்தார். 

வேளச்சேரி அருகே தனியார் கல்லூரி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி, ஆபாசமாக பேசி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட  பேராசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

சென்னை வேளச்சேரி அருகே ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. இங்கு. தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த ஆபிரகாம் அலெக்ஸ் (48), இங்கு பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர், வகுப்புகளில் மாணவிகளிடம், ஆபாசமாக பேசியும், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி, பாதிக்கப்பட்ட மூன்றாமாண்டு மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம், அதன் மீது, எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கடந்த 6ம்தேதி துறைத் தலைவரிடமும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவரும் பேராசிரியரை கைது செய்யவேண்டும் என்று, நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில், மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பாலியல் தொல்லை தரும் பேராசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட 2 மாணவிகள்  பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ராமநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதில், பாட வகுப்புகள் மற்றும் ஓய்வு நேரங்களில் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை கூறி, ஆபாசமாக பேசுவதுடன், பாலியல் தொல்லையில் பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேராசிரியரை கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

click me!