தோழியுடன் செக்ஸ் தொடர்பு !! 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஓடிப்போன இளம் பெண் !!

By Selvanayagam PFirst Published Oct 18, 2019, 10:41 AM IST
Highlights

வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வந்த பெண்ணுடன் இளம் பெண் ஒருவருக்கு லெஸ்பியன் தொடர்பு ஏற்பட்டதையடுத்து பெண்கள் இருவரும் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஓடிப்போயினர்.
 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில்  கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ள தொண்டிகாந்தியார் வீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  6 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

மணிவேல்  கோவை மாவட்டத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.  இத் தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மணிவேல் கோவையில் இருந்து எப்போதாவது ஒருமுறை திருவாடாணை வந்து மனைவி குழந்தைகளை பார்த்து செல்வார். சுகன்யாவும், 2 குழந்தைகளும் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்தான் அந்த  வீட்டின் ஒரு பகுதிக்கு சினேகா என்ற இளம்பெண் வாடகைக்கு குடி வந்துள்ளார். கணவர் இல்லாத காரணத்தினால் சுகன்யாவுக்கும், சினேகாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு முறை மணிவேல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி சுகன்யாவுக்கும், சினேகாவுக்கும் செக்ஸ் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிவேல், தன் மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதியன்று சுகன்யா தன்னுடைய குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு சினேகாவுடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார். வீட்டில் மனைவி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிவேல் தொண்டிகாந்தியார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக பெண்கள் இருவரையும்  தேடி வருகின்றனர்.

click me!