பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்று ஆபாச சைகை.. இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் அதிரடி கைது.!

By vinoth kumarFirst Published May 30, 2022, 11:11 AM IST
Highlights

திருச்சி மாவட்டம் பொன்மலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவிகள் முன்பாக வாலிபர் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நின்று ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து முகம் சுழித்த மாணவிகள் பெற்றோர்களிடம்  புகார் தெரிவித்துள்ளனர். 

தனியார் பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி மாவட்டம் பொன்மலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவிகள் முன்பாக வாலிபர் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நின்று ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து முகம் சுழித்த மாணவிகள் பெற்றோர்களிடம்  புகார் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து பொன்மலை காவல் நிலையத்தில் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!