புதருக்குள் வைத்து பலாத்காரம் செய்யும்போது ஓயாமல் அலறல்.! கடுப்பான வாலிபர்.! என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Sep 14, 2022, 8:12 AM IST
Highlights

வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்கு ரேவதி காட்டுப்பாதை வழியாக நடந்து வருவது வழக்கம். கடந்த 10ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற ரேவதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

திருமணமான பெண்ணை வலுக்காட்டாய தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அருகே கரியாக்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரத்தனசாமி மனைவி ரேவதி (35). இவர் தனது கணவர், மகனுடன் வசித்து வந்தார். கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். குடும்ப சூழல் காரணமான ரேவதி தனியார் பனியன் நிறுவனத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாக வேலைக்கு சென்று வந்தார். 

இதையும் படிங்க;- காதல் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிகேட்ட கணவரை கழற்றிவிட்டு எஸ்கேப்.. இறுதியில் நடந்த சோகம்..!

வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்கு ரேவதி காட்டுப்பாதை வழியாக நடந்து வருவது வழக்கம். கடந்த 10ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற ரேவதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், ஒரு முட்புதர் அருகே ரேவதி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். 

இதுதொடர்பாக ரேவதி வேலைபார்த்து வந்த மில் அருகே வசித்து வந்த  வடமாநிலத்தை சேர்ந்த உமேஷ் ரிஷிதேவ் (41) என்பவரை கைது விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- ரேவதி வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு நடந்து செல்வார். அவர் செல்லும் பகுதி காட்டுப்பகுதி அங்கு ஆள் நடமாட்டம் இருக்காது. சம்பவத்தன்று ரேவதி தனியாக செல்வதை அறிந்து பின்தொடர்ந்து சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரேவதியை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றேன். அவர் சத்தம் போடவே, அருகில் இருந்த கல்லால் தலையில் தாக்கினேன். இதில் ரேவதி மயங்கினார். அப்போது அவரை பலாத்காரம் செய்தேன். அப்போது ரேவதி உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, உமேஷ் ரிஷிதேவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க;-  பார்த்ததுமே பத்திக்கிச்சு.. 20 வயது இளைஞரை கரெக்ட் செய்து உல்லாசம்.. வெளியே கசிந்த கள்ள உறவால் நடந்த அதிர்ச்சி

click me!