கல்யாணம் ஆகுற வயசுல பக்கத்து வீட்டு சிறுவனுடன் அடிக்கடி உல்லாசம்.. 5 மாத கர்ப்பம், இளம்பெண் மீது போக்சோ..

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2022, 8:03 PM IST
Highlights

17 வயது சிறுவனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு  கர்ப்பமான பெண் மீது போலீசார் போக்சோ  சட்டத்திற்கு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 19 வயதாகும் அந்தப் பெண்  17 வயது சிறுவனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த வழக்கு பாய்ந்துள்ளது. 
 

17 வயது சிறுவனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு  கர்ப்பமான பெண் மீது போலீசார் போக்சோ  சட்டத்திற்கு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 19 வயதாகும் அந்தப் பெண்  17 வயது சிறுவனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த வழக்கு பாய்ந்துள்ளது. 

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஆண் பெண் பேதமின்றி பாலியல் வன்முறை அரங்கேறி வருகிறது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளை பாதுகாக்கவே கடந்த 2012ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் பாலின வித்தியாசம் இன்றி 18வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுவர்களை பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் ஆகும். இச்சட்டம் வருவதற்குமுன் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்:   5 மாத கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிச் சென்று கணவன் கண்ணெதிரில்.. 6 பேர் கும்பல் மாறி மாறி வன்புணர்வு...

அதாவது குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் என வித்தியாசமின்றி அனைத்து வழக்குகளும் ஒரே மாதிரியாகவே கையாளப்பட்டு வந்தன. ஆனால் சிறுவர்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதே போக்சோ சட்டம், அது குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுப்பது, பாலியல் சீண்டலுக்கு உட்படுத்துவது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்றோர் மீது இந்த சட்டம் பாயும், அதாவது இந்த  சட்டம் என்பது, பாதிக்கப்படும் குழந்தைகளின் வழக்கில் 30 நாட்களில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்தே இதன் சிறப்பாகும்.

இதையும் படியுங்கள்: தன்னை ஆசைதீர அனுபவித்தவனை அலறவிட்ட விமான பணிப்பெண்.. அறையில் பூட்டிவைத்து எடுத்த ரிவென்ஜ்.

இது சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வழிவகை செய்கிறது, அதிலும் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி இருந்தால், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை  கிடைக்கவும் வழிவகை செய்கிறது, பொதுவாக சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாகப்பட்டினம் அருகே 17 வயது சிறுவனை 19 வயது பெண் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த ஆலமழை கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார், அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இந்நிலையில் வீட்டின் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவனுடன் அந்தப்பெண் பழகி வந்தார், அடிக்கடி அந்த சிறுவனை பாலியல்  இசைக்கு உட்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார், 19 வயதான பெண் கர்ப்பமானார், தற்போது அந்தப் பெண் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.  இது இரு வீட்டாருக்கும் தெரிந்தது, தனது கற்பகத்துக்கு பக்கத்து வீட்டு சிறுவன் தான் காரணம் என்று அந்த பெண் கூறினார்.

இந்நிலையில் சிறுவனின்  தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில் அந்தப் பெண்ணுக்கு 19 வயது என்றும் அந்த சிறுவனுக்கு ஒரு 17 வயது மட்டுமே ஆகிறது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நாகை மகளிர் போலீசார் அந்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

click me!