வீட்டில் புது மனைவி... ஓட்டலில் ரூம் போட்டு காதலியுடன் உல்லாசம் . கையும் களவுமாக சிக்கிய கணவன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 1, 2022, 8:26 PM IST
Highlights

திருமணமான ஒரு சில நாட்களில் கணவன் கள்ளக்காதலியுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசத்தில் ஈடுபட்ட நிலையில் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

திருமணமான ஒரு சில நாட்களில் கணவன் கள்ளக்காதலியுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசத்தில் ஈடுபட்ட நிலையில் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதிக வரதட்சணை பெற்று திருமணம் செய்த நிலையில் தனக்கு துரோகம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்துள்ளது.

சமீபகாலமாக திருமணத்திற்கு புறம்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கணவனுக்குத் தெரியாமல், மனைவியோ மனைவிக்குத் தெரியாமல் கணவனோ கள்ளக்காதலில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது, பெரும்பாலும் இது போன்ற உறவுகள் கொலை  தற்கொலையில் போய் முடிகிறது. சில நேரங்களில் வாழ்க்கையையே பறிகொடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். 

இதையும் படியுங்கள்:  100 முறைக்கும் மேல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.. இன்ஸ்டா காதல் விபரீதம் - அதிர்ச்சி சம்பவம்

இதுபோன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் இந்து குருபெண்டாவை  சேர்ந்தவர் சலம் வெங்கடேஷ்  தொட்டபள்ளி மண்டலம் பொட்டல புடி அலுவலகத்தில் பொறியியல் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுமா சந்து என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அரசு அதிகாரி என்பதால் பெண்வீட்டாரிடம்  அதிக வரதட்சணை பெற்று வெங்கடேசன் சுமாவை திருமணம் செய்து கொண்டார். 

இதையும் படியுங்கள்: பள்ளி மாணவர்களை குறி வைக்கும் போதை கும்பல்.! நூதன முறையில் கஞ்சா விற்பனை... அதிர்ச்சியில் போலீஸ்

திருமணமான ஒரு சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தனர், பின்னர் வெங்கடேசனின் நடவடிக்கையில் மனைவி சுமாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கணவனை கண்காணித்ததில் வெங்கடேசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியீருக்குக் சென்ற வெங்கடேஷ் ஒரு ஓட்டலில் அறை எடுத்து காதலியுடன் தங்கினார். இது குறித்து தகவல் அறிந்த சுமா போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன், தனது உறவினர்களுடன் சென்று காதலியுடன் இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்தார்.

இதையடுத்து அவரை ஆழைத்துச் சென்ற போலீசார் வெங்கடேசனுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் அவர் திருந்தவில்லை, இதற்கிடையில் வெங்கடேஷ் கொடவலூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு காதலியை அழைத்து சென்று, காதலிக்கு தாலி கட்டினார், அதை தடுக்க மனைவி சுமா எவ்வளவு முயற்சித்தும் தடுக்கமுடியவில்லை, அப்போது வெங்கடேசனின் பாட்டிவீட்டு உறவினர்கள் மனைவி சுமாவை தாக்கியதாகவும் தெரிகிறது, இதனால் தனக்கு நியாயம் வேண்டும் என அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

click me!