திமுக முக்கிய பிரமுகர் வெட்டி படுகொலை... உடலை பார்த்து கதறி துடித்த எம்எல்ஏ பூங்கோதை...!

By vinoth kumarFirst Published Feb 19, 2021, 2:01 PM IST
Highlights

நெல்லை அருகே முன்விரோதத்தில், திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை அருகே முன்விரோதத்தில், திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்துள்ள வடக்கு அரியநாயகிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்புக்குட்டி மகன் செல்லத்துறை(38).  திமுக நெல்லை கிழக்கு மாவட்ட  இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். அரியநாயகிபுரம் ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். இவருக்கும், பக்கத்து கிராமமான பத்தல்மேடு பகுதியை சேர்ந்த ராககுட்டி மகன் ஐயப்பன்  (45) என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு செல்லத்துரை சென்றுள்ளார். அப்போது, ஙெ்கு மறைந்திருந்த கும்பல் செல்லத்துறையை வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்லத்துறையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, செல்லத்துறை உயிரிழந்த செய்தியை அறிந்த திமுக எம்எல்ஏ பூங்கோதை மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதார். 

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தம்பி செல்லதுரை சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். எல்லோருடனும் அன்புடன் பழகக்கூடிய குணத்தை பெற்றிருந்த தம்பியின் மரணம் கழகத்துக்கும் இளைஞரணிக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா காலத்தில் காவல்துறையின் நெருக்கடியையும் மீறி பல நூறு குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் தம்பி செல்லதுரை. அவரது மரணத்துக்கு காரணமான கொலையாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

click me!