Trichy Murder: திருச்சியில் அதிமுக கவுன்சிலரின் மகன் பட்ட பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை; கொலையாளிகள் துணீகரம்

By Velmurugan sFirst Published Apr 30, 2024, 1:40 PM IST
Highlights

திருச்சி அரியமங்கலம் பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் தொழில் போட்டி காரணமாக பட்ட பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர்கள் கேபிள் தொழில் செய்து வருகின்றனர். மேலும் பன்றி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27). பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும், கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் தொடர்ந்து இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை இந்த முன் விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

புதையல் எனக்கூறி பானையில் மண்ணை வைத்து ரூ.7.5 லட்சம் மோசடி; சேலத்தில் போலி சாமியார்கள் கைது

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் முத்துக்குமார் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதை ஆசாமி வெறியாட்டம்; உயிர் பயத்தில் மருத்துவர், செவிலியர்கள்

சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராவில்பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன் விரோதத்தால் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணைணை தீவிர படுத்தி உள்ளனர். உயிரிழந்த முத்துக்குமார் மீதும் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!