அட கொடுமையே.. பசுமாட்டையும் விட்டு வைக்காத காமக்கொடூரன்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Apr 28, 2022, 9:40 AM IST
Highlights

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் லக்னோ சரோஜினி நகர் பகுதியில் வசித்து வந்தவர் மஜீத். இவர் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக மாட்டின் சத்தம் கேட்கவே, பக்கத்து வீட்டில் உள்ள மாட்டினை சென்று பார்த்துள்ளார். 

உத்தர பிரதேசத்தில் பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் லக்னோ சரோஜினி நகர் பகுதியில் வசித்து வந்தவர் மஜீத். இவர் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக மாட்டின் சத்தம் கேட்கவே, பக்கத்து வீட்டில் உள்ள மாட்டினை சென்று பார்த்துள்ளார். அப்போது, பசுமாட்டுடன் ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அவர் கூச்சலிடவே, அங்கிருந்து அந்த நபர் தப்பியோடியுள்ளார்.

Latest Videos

தொடர்ந்து, தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது அந்த நபர் பக்கத்து வீட்டுக்காரர் தான் என்பது  உறுதியானது. இதைத்தொடர்ந்து, மாட்டின் உரிமையாளரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாட்டின் உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள், குற்றம்சாட்டப்பட்ட நபரை தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில் கால்நடைகளுடன் மனிதர்கள் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- எவ்வளவு கெஞ்சியும் விடாத மாமியார்.. மருமகனை கதற விட்ட தரமான சம்பவம்.. அதிர்ச்சியில் மகள்..!

click me!