உல்லாசத்துக்கு வரலன்னா நாசம் பண்ணிடுவேன்... தங்கை உறவுமுறை பெண்ணை ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டிய அண்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2022, 9:02 PM IST
Highlights

தங்கை உறவு முறையாகும் பெண்ணை ஆபாசமாக  புகைப்படம் எடுத்து உல்லாசத்துக்கு வருமாறு அழைத்து டார்ச்சர் செய்து அந்த பெண்ணை உடன் அழைத்துச் சென்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

தங்கை உறவு முறையாகும் பெண்ணை ஆபாசமாக  புகைப்படம் எடுத்து உல்லாசத்துக்கு வருமாறு அழைத்து டார்ச்சர் செய்து அந்த பெண்ணை உடன் அழைத்துச் சென்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (43) இவரது மனைவி பேபி (38) இவர்களது மூத்த மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (21)நேற்று முன்தினம் வழக்கமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். பொழுது விடிந்து பார்த்தபோது மகள் கவிதாவை காணவில்லை.

வீட்டில் எங்கு தேடியும் மகள் இல்லை, இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடினர், அவரது தோழிகளுக்கும் போன் செய்து தேடினார் ஆனால் மகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் அவரது படுக்கை அறையில் சென்று பார்த்தபோது கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் அஞ்சுகம் நகரில் உள்ள தனது அண்ணன் முறையான 21 வயது உடைய முருகனுடன் நட்பாக பழகி வந்ததாகவும், முருகன் தனது புகைப்படங்களை ஆபாசமாக எடுத்து வைத்துக்கொண்டு அதில் இருவரும் சேர்ந்து இருப்பது போல சித்தரித்து தன்னை தொடர்ந்து மிரட்டுவதாகவும்,  உல்லாசத்துக்கு வரவில்லை என்றால் நாசம் செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும், 

தன்னுடன் வாழ வில்லை என்றால் யாருடனும் வாழ முடியாது என மிரட்டி வந்த்தாகவும், இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்ததாகவும், கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாகவும் எனவே முருகனுடன் செல்ல விருப்பமில்லை ஆனாலும் அவருடன் சென்று செல்போனில் உள்ள ஆபாச படங்களை டெலிட் செய்து விட்டு திரும்பி வந்து விடுகிறேன் என உருக்கமாக  அதில் கூறியுள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு அவரது பெற்றோர்கள் பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்தக் கடிதத்தைக் காண்பித்து தன் மகளை எப்படியாவது கண்டுபிடித்து தரும்படி பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஊரில் உலகத்தில் நடக்காததா நடந்துவிட்டது. அண்ணன் தங்கை என்றால் என்ன இருவரையும் சேர்த்து வையுங்கள். அண்ணன் தங்கையாக இருந்தால் என்ன? திருமணம் செய்து கொள்ளக் கூடாதா! என அலட்சியமாக கூறினர். இதைக் கண்டு பதறிய பெற்றோர் எங்கள் மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் ஐயா என கதறினர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அதற்கு சிஎஸ்ஆர் கூட தராமல் காணாமல் போன இருவரும் கிடைத்தால் உங்களிடம் ஒப்படைக்கிறோம் என கூறி அனுப்பி வைத்தனர். அண்ணன் முறையில் உள்ள இளைஞர் தங்கை உறவில் உள்ள பெண்ணின்  புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி உடன் அழைத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

click me!