தனி அறையில் உறங்கிய கல்லூரி மாணவி.. நள்ளிரவில் உள்ளே நுழைந்து உல்லாசம்.. 19 வயது இளைஞர் வெறித்தனம்.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2022, 1:28 PM IST
Highlights

சென்னை பல்லாவரம் அடுத்துள்ள கோவூர் பகுதியில் மேல் மாடி அறையில் தனியாக உறங்கிய 21 வயதுடைய கல்லூரி  மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது வாலிபனை பொலிசார் கைது செய்துள்ளனர். 

சென்னை பல்லாவரம் அடுத்துள்ள கோவூர் பகுதியில் மேல் மாடி அறையில் தனியாக உறங்கிய 21 வயதுடைய கல்லூரி  மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது வாலிபனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவ்வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்தபோது அங்கு நகை பணம் இல்லாததால் அந்தப் பெண்ணை கற்பழித்ததாக அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார். இது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூர் போரூர் பகுதியில் 24 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேல்மாடியில் தனியறையில் உறங்கினார். அப்போது நள்ளிரவில் 2 மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணை தாக்கி கத்தியைக் காட்டி பணம் கேட்டுள்ளார்.

தன்னிடம் பணம், நகை இல்லை என அந்த பெண் கூறவே கத்திமுனையில் அந்தப் பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி உள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தன்னை கற்பழித்த நபருக்கு 20 வயது இருக்கும் என்றும் அந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார். இத் தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். கஞ்சா போதையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை அந்தப் பெண்ணிடம் காண்பித்தனர், அதில் ஒரு நபரை அந்த பெண் அடையாளம் காட்டினார். பின்னர் அவரை குறித்து விசாரித்த போலீசாருக்கு குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரிய வந்தது. சதீஷை கைது செய்ய போலீஸார் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை, இதனால் செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்து, சதீஷை வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்ட சாலை அருகே சுற்றிவளைத்தனர்.

ஆனால் சதீஷ் போலீசிடம் தப்பிக்க முயற்சித்து பாலத்திலிருந்து தவறி விழுந்து கை கால் முறிவு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினர். வழக்கு குன்றத்தூர் காவல் நிலையத்தில் இருந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் சதீஷிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு அருகே தான் தண்ணீர் கம்பெனியில் வேலை செய்வதாகவும், வேலைக்கு போகும் போதும் வரும் போதும் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்ததாகவும். அந்த வீட்டில் யாரும் ஆண்கள் இல்லாததால் உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணைக் கற்பழித்த தாகவும் கூறினார். ஆண்கள் யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு அதில் கொள்ளையடித்த வந்ததுடன் கத்தியைக் காட்டி பெண்களை உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறினார். இந்நிலையில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

click me!