செக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி...!! கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2019, 7:09 AM IST
Highlights

ஜெயகொடி- கார்த்திகா தம்பதிகள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில் முதலில் சுரேஷ் அத்துமீறி தங்கள் வீட்டிற்கு நுழைந்தாகவும் இதனால் அவரை அடித்து உதைத்து கட்டி போட்டதாகவும்,பின்னர் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுரேஷ் தப்பி சென்றதாக கூறியுள்ளனர்.
 

சென்னை பாடியில் ரவுடியை அடித்து கொலை செய்து முற் புதறில் வீசி விட்டு நாடகமாடிய கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

சென்னை கொரட்டூர் அடுத்த  பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவன் சுரேஷ் என்ற கிரைம் சுரேஷ்(30), இவன் மீது கொலை,கொள்ளை வழக்கு,கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரை கடந்த  14 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தாய் கலா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து கொரட்டூர் காவல் துறையினர் சுரேசை தேடி வந்தார்.இதில் அதே பகுதியை சேர்ந்த ஜெயகொடி- கார்த்திகா தம்பதிகள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில் முதலில் சுரேஷ் அத்துமீறி தங்கள் வீட்டிற்கு நுழைந்தாகவும் இதனால் அவரை அடித்து உதைத்து கட்டி போட்டதாகவும்,பின்னர் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுரேஷ் தப்பி சென்றதாக கூறியுள்ளனர்.

இதில் காவல்துறையினருக்கு பல சந்தேகம் எழுந்தது  மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில்  சுரேஷை கொலை செய்துவிட்டு உடலை மறைக்க  சென்ற்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் உள்ள முற்புதரில் வீசியது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த கொரட்டூர் காவல்துறையினர் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கே.எம்.சி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெயகொடி குடும்பத்திற்கும் சுரேசிற்கும் என்ன தொடர்பு என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கொலை கள்ளக்காதல் காரணமாக நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்
 

click me!