கொடூரம்.! 9 பேர் கூட்டாக சேர்ந்து 11 வயது சிறுமியை சீரழித்த சம்பவம்.. பரபரப்பு !

By Raghupati RFirst Published Jul 29, 2022, 7:57 PM IST
Highlights

11 வயது சிறுமியை 9 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை அடுத்த ஒரு கிராமத்தில் 11 வயதில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவரது பெற்றோர்கள் கூலி வேலை பார்த்து வரும் நிலையில், சிறுமியை வீட்டில் தனியே விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த மாதம், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான ரோஷன் என்ற 29 வயது இளைஞர், சிறுமியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். 

மேலும் சிறுமிக்கு சில பொருட்களும், பணமும் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ரோஷன். சிறுமியை உள்ளே அழைத்து சென்றவுடன் அங்கே ரோஷனின் நண்பர்கள் கும்பலாக இருந்தனர். இதனால் பதற்றமடைந்த சிறுமி வெளியே வர முயன்ற போது, அவர்கள் அவரை விடவில்லை. அப்போது ரோஷன் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..அடேங்கப்பா.! முதல்வரின் மகன் பிறந்தநாளுக்கு வராத அரசு ஊழியர்கள்..நோட்டீஸ் அனுப்பிய அரசு

மேலும் சிறுமியிடம் பணத்தை கொடுத்து, இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளனர். இதனால் பயந்த அந்த சிறுமி, வெளியில் சொல்லாமல் இருந்ததால், சில நாட்களிலேயே ரோஷனின் 3 நண்பர்கள் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்ட 40 வயதுமிக்க நபர் ஒருவரும், அந்த சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து ஒரு கொலை வழக்கில் ரோஷனை கைது செய்த காவல்துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும் வாக்குமூலமாக அளித்தார். ரோஷனின் வாக்குமூலத்தின் படி, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயதுமிக்க கஜனன் என்ற நபருடன் சேர்த்து மொத்தம் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

click me!