பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 1 கோடி கேட்ட இளம் நடிகை..! யார் தெரியுமா?

By manimegalai aFirst Published Aug 31, 2020, 7:41 PM IST
Highlights

தமிழில் விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள பிரபல இளம் நடிகை ஒருவர் ஒரு கோடி கேட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனால் இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 

தமிழில் விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள பிரபல இளம் நடிகை ஒருவர் ஒரு கோடி கேட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனால் இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்: முன்னழகு... பின்னழகை காட்டி... மொத்த உடலும் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி..! வீடியோ
 

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள். 

நார்மலாகவே அடுத்து வீட்டு பிரச்சனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் எல்லா மனிதருக்கும் அதிகம் தானே. அதை தான் கொஞ்சம் மார்டனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

மேலும் செய்திகள்: நயன்தாரா கூட இப்படி போஸ் கொடுத்தது இல்லை... ஓணம் போட்டோ ஷூட்டில் ஓங்கி அடித்து வெயிட் காட்டிய அனிகா!
 

தெலுங்கில் ஆரம்பிச்சிட்டாங்களே தமிழில் இன்னும் எப்போ தொடங்கும் என தெரியவில்லையே என இங்குள்ள பிக்பாஸ் ரசிகர்கள் வாய்விட்டு வறுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்க உள்ள கமல் ஹாசனின் கெட்டப்பு இதுவா? என்று புகைப்படங்கள் கூட தாறுமாறு வைரலாகின. அதில் முரட்டு மீசை, தாடியுடன் செம்ம ஸ்டைலாக இருந்த கமல் போட்டோவை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

இப்போது அந்த கெட்டப்பில் தான் கமல் ஹாசன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் பிக்பாஸ் சீசன் 4 தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரோமோ வீடியோவுடன் வெளியிட்டிருக்கிறது விஜய் டி.வி. அதில் லாக்டவுனால் வேலை இல்லாமல் இருப்பவர்களை உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலை பயன்படுத்தி வேலைக்கு செல்லுங்கள் என கூறியுள்ள கமல்.. இதோ நான் வேலைக்கு வந்துட்டேன்... வேலையை  ஆரம்பிக்கலாமா? என்ன வேலை என முடிக்க... அசத்தலாக வருகிறது பிக்பாஸ் புரோமோ...

மேலும் செய்திகள்: முதல் முறையாக அப்பாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய வனிதா!
 

பிக்பாஸ் ப்ரோமோ வெளியானதில் இருந்து, பிக்பாஸ் சீசன் 4... நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் யார் யார்? என்பது குறித்து, தற்போது ஒரு விவாதம் சென்று கொண்டிருக்கிறது. அதன் படி தற்போது வெளியாகியுள்ளது தகவலின் படி, ரம்யா பாண்டியன், விஜய் டிவி புகழ், ஷிவானி நாராயணன், சூர்யா தேவி, நடிகை கிரண் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து 'இன்ஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தின் நாயகி, ஷில்பா மஞ்சுநாத்திடம், பிக்பாஸ் தரப்பில் இருந்து, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் ஷில்பா, ஒரு கோடி கொடுத்தா தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என கூறியுள்ளாராம், எனவே இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வாரா? என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது.

click me!