கதாநாயகன் கூட அப்பறம் தான்... அடித்து பிடித்து யோகிபாபுவை முதலில் கமிட் செய்த இயக்குனர்!

Published : Apr 11, 2019, 07:44 PM IST
கதாநாயகன் கூட அப்பறம் தான்...  அடித்து பிடித்து யோகிபாபுவை முதலில் கமிட் செய்த இயக்குனர்!

சுருக்கம்

தமிழ் சினிமா மட்டுமல்லாது,  அனைத்து மொழி சினிமா துறைகளிலும் ஒரு கதை உருவானதும் முதலில் தேர்வு செய்யப்படுபவர்கள் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாகத்தான் இருக்கும்.  

தமிழ் சினிமா மட்டுமல்லாது,  அனைத்து மொழி சினிமா துறைகளிலும் ஒரு கதை உருவானதும் முதலில் தேர்வு செய்யப்படுபவர்கள் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாகத்தான் இருக்கும்.

ஆனால் இயக்குனர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் மில்கா செல்வகுமார் இயக்க உள்ள படத்திற்கு, கதாநாயகன்,  கதாநாயகி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில், காமெடி நடிகர் யோகி பாபுவை கமிட் செய்துள்ளார்.

இந்த படத்தில் யோகிபாபு காதலித்து இறந்து போன இரண்டு பேய்களை சேர்த்து வைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் பெயர் 'பியார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் காமெடி களத்தில் உருவாகும் இந்த படத்தில், யோகிபாபுவை தவிர, ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

 இந்த படத்தை இயக்க உள்ள மில்கா செல்வகுமார் தற்போது 'சண்டிமுனி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரோட சொத்த யார் ஆட்டைய போடுறது: ஓ நீ தான் அந்த அர டிக்கெட்டா? அப்பத்தா எண்ட்ரியால் அனல்பறக்கும் எதிர்நீச்சல்!
என்னுடைய சாவுக்கு நீ, உங்க அப்பா அம்மா தான் காரணம்; விவாகரத்து கேட்கும் சரவணன்: ஷாக்கான பாண்டியன்!