தெலுங்கு சினிமா முன்னணி பிரபலங்கள் பலரை பயத்தால் உறைய வைத்துள்ளவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகள் கிடைத்தாலும், பிரபலங்கள் பலர் இவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல நடிகர் பவன்கல்யான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில் பவன்கல்யானுக்கு ஆதரவாகவும், ஸ்ரீரெட்டிக்கு எதிராகவும் நடிகை மாதவி லாத தெலுங்கு பிலிம் சேம்பர் முன் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடிதினார். இவர் விஷால் நடித்த 'ஆம்பள' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட நடிகை மாதவி லதாவை போராட்டத்தை கைவிடும்படி போலீசார் அவரை எச்சரித்தும் இவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், இவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவருடைய செல்போன்னையும் போலீசார் பரிதுக்கொண்டதாக கூறப்படுகிறது. வெளியில் வந்ததும் இது குறித்து பேசிய மாதவி லதா, இதுவரை சிறையை சினிமாவில் தான் பார்த்துள்ளேன், தற்போது நேரிலும் பார்த்தேன் சிறையில் இருந்தது புதிய அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.