சமூக அக்கறை கொண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிக்கும் விக்ராந்த்!

By manimegalai aFirst Published Aug 4, 2022, 6:40 PM IST
Highlights

நடிகர் விக்ராந்த் தற்போது சமூக அக்கறை கொண்ட படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.
 

நடிகர் விக்ராந்த் தற்போது சமூக அக்கறை கொண்ட படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர்.

மேலும் செய்திகள்: இதில் கூடவா? கவர்ச்சி காட்டுவதில் கூட யாஷிகாவை அட்டை காப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
 

விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு  கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். 

மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கின்றனர். இப்படம் தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து  குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.

மேலும் செய்திகள்: நடிகருடன் விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்..! வைரலாகும் வீடியோ..!
 

மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். கலையை தியாகராஜனும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் கவனிக்கின்றனர். சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

click me!