பாலியல் தொல்லை கொடுத்தவரை... ஏன் காட்டிக்கொடுக்க மறுக்கிறேன் - வரலட்சுமி பகீர் பதில்...

 
Published : Feb 23, 2017, 01:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
பாலியல் தொல்லை கொடுத்தவரை... ஏன் காட்டிக்கொடுக்க மறுக்கிறேன் - வரலட்சுமி பகீர் பதில்...

சுருக்கம்

நடிகை பாவனா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார் என  செய்தி வந்த பின் , அதே போல் நானும் ஒரு சேனல் அதிகாரியால் பாதிக்க பட்டேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், பிரபல நடிகரின் மகளுமான வரலட்சுமி  சரத்குமார் கூறி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

மேலும் அவர் தன்னிடம் வேறு விஷயங்களுக்கு எப்போது சந்திக்கலாம் என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கேட்டதாக தெரிவித்தார்.

அதற்கு அவருடைய ரசிகர்கள் பலர் யார் அந்த நபர் பெயரை சொல்லுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... அது எந்த சேனல் என வரலட்சுமியை துருவி துருவி பல கேள்விகள் கேட்டனர்.

அதற்கு தற்போது பதில் கூறியுள்ள வரலட்சுமி,  நான் ஏன்  அவரை பற்றி சேனலில் அல்லது போலீஸிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகள்  பலரும் கேட்டு வருகின்றனர். 

ஒரு நபரின் தவறு அதற்காக அந்த சேனலின் பெயரை ஏன் நான் கெடுக்கவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தான் இந்த போராட்டம்.. ஒருவருக்கு எதிராக மட்டுமல்ல. நாட்டில் உள்ள எல்லா குற்றவாளிகளுக்கு எதிராக தான் நான் போராடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?
அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்