கவர்ச்சி காட்டுவதில் மட்டும் இல்லை... உதவி செய்வதிலும் பெரிய மனசு! 5 கோடி அள்ளிக்கொடுத்த பிரபல நடிகை!

By manimegalai aFirst Published May 12, 2020, 1:39 PM IST
Highlights

பிரபல கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தற்போது கொரோனா பிரச்சனையால் அவதி பட்டு வரும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில், ரூபாய் 5 கோடி, நிதி உதவி அளித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
 

பிரபல கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தற்போது கொரோனா பிரச்சனையால் அவதி பட்டு வரும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில், ரூபாய் 5 கோடி, நிதி உதவி அளித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

ஒரு, விளம்பர மாடலாக வலம் வந்த ஊர்வசி ரவுத்தேலா, சிங் சாப் த கிரேட் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

 

மேலும் செய்திகள்: மறக்க முடியாத அழகிய நினைவுகள்..! கணவர் - குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் சினேகா!
 

15 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த ஊர்வசி ரவுத்தேலா 2009ம் ஆண்டு நடந்த மிஸ் டீன் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், 2105ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சன்னி லியோனுக்கு, அடுத்த படியாக கவர்ச்சியில் கிறங்கடித்து வரும் நாயகி இவர் என்று கூட கூறலாம். 

 

மேலும் செய்திகள்: கோடியில் சம்பளம் வாங்கியும் மனம் வராத முன்னணி நடிகர்கள்..! 50 சதவீத ஊதியத்தை குறைத்த இளம் நடிகர்!
 

பாலிவுட்டின் கவர்ச்சி புயலான ஊர்வசி ரவுத்தேலா தனது படு ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, லைக்குகளை குவித்து வருகிறார். எப்ப பார்த்தாலும் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் வீடியோ, நிர்வாணமாக கப்பிங் மசாஜ் எடுக்கும் போட்டோ என ரசிகர்களின் கண்களுக்கு இதமான புகைப்படங்களை வெளியிட்டு உசுப்பேத்தி, வருகிறார். 

இவரின் இது போன்ற புகைப்படங்களுக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் வாய்பிளர்ந்து ரசித்தாலும், மற்றொரு தரப்பினர் வழக்கம் போல் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். 

 

மேலும் செய்திகள்: நயன்தாரா குழந்தையில் கூட இவ்வளவு அழகா! யாரும் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டு அம்மாவுக்கு வாழ்த்து!
 

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலிவுட் மற்றும் அணைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னி ஊர்வசி ரவுத்தேலா ரூபாய் 5 கோடி நிதி உதவி அளித்து கவர்ச்சி காட்டுவதில் மட்டும் அல்ல, உதவி செய்வதிலும் தனக்கு பெரிய மனசு தான் என நிரூபித்துள்ளார். இவரின் இந்த உதவிக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

click me!