எஸ்.வி.சேகர் உள்பட பலரை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றிய இளம்பெண் கைது....!!!

 
Published : Jan 09, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
எஸ்.வி.சேகர் உள்பட பலரை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றிய இளம்பெண் கைது....!!!

சுருக்கம்

சென்னையில் பல சினிமா பிரபலங்களை நூதன வகையில் ஏமாற்றிய 26 வயது இளம்பெண், அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த ஸ்வேதா சுரேஷ் என்ற இவருக்கு திருமணம் ஆகி 3 வயது குழந்தை உள்ளது, இவர் பல  சினிமா பிரபலங்கள் உள்பட உலகம் முழுவதும் பயணம் செய்ய சலுகை விலையில் விமான டிக்கெட் எடுத்துத் தருவதாக ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். 

இவரிடம் ஏமாந்தவர்களில் பிரபல பாடகர் தேவன் ஏகாம்பரம், எஸ்.வி.சேகர் ஆகியோர்களும் அடங்குவர்.

பேஸ்புக் மூலமும், நேரிலும் பிரபலங்களை அணுகி உலகம் முழுவதையும் விமானத்தில் சுற்றி பார்க்க ரூ.1.25 லட்சத்த்ல் விமான டிக்கெட்டுக்களை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு காலாவதியான டிக்கெட்டுக்களை கொடுத்து ஏமாற்றியுள்ளார். 

இதுகுறித்து காவல்துறையினர்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஸ்வேதா சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இபிகோ 406,420 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!