Maanaadu: பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் சிம்புவின் ‘மாநாடு’- உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்

By Ganesh PerumalFirst Published Nov 27, 2021, 6:00 PM IST
Highlights

மாநாடு படத்தை நேற்று பார்த்த நடிகர் ரஜினிகாந்த், வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்பட படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

சிம்புவின் படங்கள் என்றாலே பிரச்சன்னைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான், அந்த வகையில் பல சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில் கடந்த 25-ந் தேதி வெளியான திரைப்படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

ரிலீசுக்கு முன்னர் பல்வேறு தடைகளை சந்தித்த இப்படம், அதன் வெற்றியால் தற்போது அவை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி உள்ளது. சிம்புவின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 

நேற்று படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்பட படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த சிம்புவுக்கு இப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்தின் வசூல் நிலவரம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. 

இவற்றுள் பெரும்பாலானவை முன்னுக்குபின் முறனாக இருந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநாடு படம் தமிழகத்தில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் 14 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இனி வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!