vignesh shivan: அடுத்த லவ் ஸ்டோரிக்கு தயாரான விக்னேஷ் சிவன்.... அதுவும் யாரோட தெரியுமா?

By Ganesh PerumalFirst Published Nov 27, 2021, 5:23 PM IST
Highlights

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காகும். 'ஆதித்ய வர்மா' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்து முடித்துளார் துருவ் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன்பின்னர்  ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் துருவ் விக்ரம். இப்படத்தில் அவர் கபடி வீரராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாரி செல்வராஜ் படத்துக்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் துருவ் விக்ரம் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாம். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீசுக்கு பின் துருவ் விக்ரம் படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

click me!