என் பாவம் சும்மா விடாது! இந்த முறை நடிகர் இல்லை! தலைவரையே சிக்க வைத்த ஸ்ரீரெட்டி!

By manimegalai aFirst Published Sep 6, 2018, 1:36 PM IST
Highlights

தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பெரிய பட்டியலையே வெளியிட்டார். 
 

தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பெரிய பட்டியலையே வெளியிட்டார். 

இந்நிலையில் இந்த முறை, இவரிடம் சிக்கியுள்ளது தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜி ராஜா தான். ஆனால் இவர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை. மோசடி புகார் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி கூறியுள்ளது:

தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா தரகர் போல் செயல்படுகிறார். எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை சொல்ல நடிகர் சங்கத்தின் கதவை தட்டினேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. விளம்பரத்துக்காக பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி நான் நடிக்கிறேன் என்று கேவலமாக பேசினார். எனது பாவம் அவரை சும்மா விடாது என கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி. 

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் வயதான நடிகர்களுக்கு முதொயோர் இல்லம் கட்டுவதற்காக அமெரிக்காவில் நிதி திரட்டினார்கள். அந்த பணத்தை சிலருடன் சேர்ந்து அவர் தின்று விட்டார். ஒரு முன்னணி நடிகருக்கும் வசூலான அந்த பணத்தில் இருந்து பெரிய தொகை போய் இருக்கிறது.

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர்களின் குடும்பகளுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதற்காக பல கோடிகள் எனக்கு தருவதாகவும் பேரம் பேசினார். அந்த பணத்தை நான் வாங்கவில்லை. வயதான தனது தந்தை, தாயை சிவாஜிராஜா கவனிக்கவில்லை. வயதான நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டுவதாக பணம் வசூலித்து மோசடி செய்தது வெட்கக்கேடு என கூறியுள்ளார். 

click me!